Sunday 17 January 2016

கதகளி : சினிமா விமர்சனம்








 விஷால் , கேத்ரின் , இமான், மதுசூதனன் மற்றும் பலர் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவந்தபடம் கதகளி . இசை ஆதி, ஒளிபதிவு பாலசுப்ரமணியன்.கடலூர் பகுதியில் நடப்பதுபோல அமைக்கப்பட்ட கதைகளம் இது.


கதை :

கடலூரில் மீனவ தலைவனாகவும், ரவுடியாகவும் இருப்பவர் தம்பா (மதுசூதனன் ). அவருக்கு துணையாக இரண்டு மச்சான்கள். இவர்களால் நான்கு வருடத்துக்கு முன்பு பாதிக்கபட்டு அதன் பின் வெளிநாடு சென்று திரும்பும் விஷாலுக்கும், விஷாலின் காதலிக்கும் திருமணம் செய்ய முடிவுசெய்யபடுகிறது . இந்நிலையில் தம்பா கொலை செய்யப்பட பழி விஷால் மேல் விழுகிறது. 

கொலையை செய்து யார் என தனது நண்பர்கள் துணையுடன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. கொலையை செய்ய காரணமானவர்கள் யாராக இருக்கலாம் என இயக்குனர் சிலரை அடையாளம் காட்ட அனைவர்மீதும் நமது சந்தேகம் ஓடுகிறது. முடிவு எதிர்பாராத ஒன்று.


+ பாயிண்ட் 

* கொலையாளி யார் என விஷால் தேட தேட நாமும் சேர்ந்து தேடவைக்கும் திரைகதை .

* கிளைமாக்ஸ் சண்டையில் கூட பாட்டை போட்டு கொள்ளும் சினிமாவில் பாடல்களை குறைத்தது .

* கருணாஸ் காமெடி

* சண்டைகாட்சிகளை வளவளவென இழுக்காதது .

* கிளைமாக்ஸ் டுவிஸ்ட் எதிர்பாராத ஒன்று.


- பாயிண்ட் .

* விஷாலின் பிளாஷ்பேக் டம்மியாக உள்ளது. நல்ல வலுவான காரணம் இல்லாம போனதால் வில்லன் மேல் பெரியகோவம் வரவில்லை.

* கேத்ரினக்கு விஷால் மேல் வரும் காதல் காட்சிகள் ரொம்ப போர் .

* பின்னணி இசை பரவாயில்லை ரகம்தான்.

* பாதிக்கு மேல் கதை இழுவையாக செல்வது. விஷால் அண்ணன் எங்கேபோவது என தெரியாமல் முழிப்பது போல கதையும் முழிக்குது.

*பாடல்கள் .

மொத்ததில் ...

பொழுதுபோகல என்றால் பார்க்கலாம். தமிழ் புத்தாண்டுக்கு டிவியில் போட நிறைய வாய்ப்புள்ளது .


இதையும் படிக்கலாமே :

ரஜினி முருகன் - சினிமா விமர்சனம்


Junior Training Officer in TN Govt.( 329 posts) 

 




No comments:

Post a Comment