Thursday 22 August 2013

இது கூட தெரியவில்லை என்றால் நீங்கள் சென்னைவாசியாக இருந்து என்ன பயன்

 
எதற்காக கூப்பிடுகிறோம் என்று தெரியாமலே நாம் பெயர்களை அழைக்கிறோம். அதிலும் பெயர்களை மொட்டை போட்டு கொச்சையாவும் அழைக்கிறோம். ஏன் இந்த பெயர் வந்தது?

சென்னை - சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.

மதராஸ் :- முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.

கோடம்பாக்கம் - கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

மாம்பலம்: மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது. மா அம்பலம் :- ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.

சைதாப்பேட்டை: சதயு புரம் : சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.

கிண்டி:- ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.

பரங்கிமலை:- ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).

சேத்துப்பட்டு: மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.

எழுமூர்: இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.
மேலும் படிக்க :
இது கூட தெரியவில்லை என்றால் நீங்கள் சென்னைவாசியாக இருந்து என்ன பயன்



நன்றி : மெயில் அனுப்பிய நண்பனுக்கு 

இதையும்  படிக்கலாமே :



கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்கள் : பகுதி 1






வாழ்த்துங்கள்








Monday 19 August 2013

பிகரை கரெக்ட் பண்ணுவது எப்படி ?


பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும் , யாரிடம் கேட்பது , எப்படி கேட்பது , அப்படியும் கேட்டுவிட்டால் இவனுக்கு இது கூட தெரியாத என எண்ணிவிட்டால் என்ன பண்ணுவது என்ற குழப்பம் இருக்கும் , அப்படி பட்டவருகளுக்காகதான் இந்த பதிவு.

எதோ எனக்கு தெரிந்த அளவில் எழுதிள்ளேன். உங்களுக்கு வேறு வழிகள் தெரிந்தால் பின்னுட்டம் அடிங்கள் .


எனக்கு தெரிந்த வரை இரண்டு வழிகள் மிக சிறப்பானவை. இதை முதலில் முயற்சி செய்து பாருங்கள். இது ஒத்து வரவில்லை என்றால்வேறு வழியை பாருங்கள் .


முதல் வழி :

1 . ரப்பர் பயன்படுத்தலாம் 

       தமிழில் இதை அழிப்பான் என கூறுவார்கள் . இதன் முஉளம் எந்த
       பிகரையும் கரெக்ட் பண்ணலாம். அழித்துவிட்டு எழுதுவதால் நேரம்
       வீணாகலாம் ஆனால் நல்ல பயன் உண்டு.

2 . whitner (வெண் -  மை )

        இந்த வெள்ளை மையால் முதலில் எழுதிய பிகரை அழித்துவிட்டு அது
       மேலே புதிதாக எழுதலாம்.



இது எதுவும் சரிவரவில்லை என்றால் எழுதிய பேபரை  கிழித்துவிட்டு புதிதாக எழுதவும்


  டிஸ்கி 1 : பிகர் ன நம்பர்னு அர்த்தம்

  டிஸ்கி 2 : வேறு அர்த்தத்தை நினைத்து வந்த ஆள்களுக்கு பலப்
                      தான்

  டிஸ்கி 3 : நான் ரொம்ப நல்ல புள்ள எனவே எனக்கு தெரிந்த பிகர் நம்பர் ,
                      நம்பர் மட்டும் தான் 



இதையும் படிக்கலாமே :


 

நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி

 

கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )

 

 

Wednesday 14 August 2013

நடிகர் விஜய் செய்தது சரியா ?




நடிகர் விஜய் செய்தது சரியா ?



தலைவா படம் பல தடங்கல்களால் தமிழ் நாட்டில் வெளிவரமுடியாமல் தவிக்கிறது . இதுக்கு முக்கியகாரணம் விஜயின் அப்பா சொன்ன ஒருவார்த்தை தான் காரணம் . "நான் அண்ணா விஜய் M.G.R ". இதனால் பல த டைகள் வந்து படம் முடங்கி யுள்ளது . இந்த நிலையில் விஜய் விட்ட ஒரு அறிக்கை அவரின் ஹீரோ இமேஜ்அய் பதம் பார்த்துள்ளது .

"புரட்சி தலைவி அம்மா மிக சிறப்பான ஆட்சி தருகிறார் என துவங்கி அவரை பயங்கரமாக புகழ்ந்து ஒரு அறிக்கை தந்துள்ளார் . வடிவேலுக்கு ஒத்து போல ஒரு நிலைமை ஏற்பட்டபோது ,ஏன் இன்னும்  சினிமாவில் அவரின் எதிர்காலமே கேள்வி குறி ஆகும்போதும் கூட அவர் தனது நிலையை மாற்றி முதல்வருக்கு ஜால்ரா அடிக்கவில்லை .


மேலும் படிக்க :

நடிகர் விஜய் செய்தது சரியா ?


=============================================


இதையும் படிக்கலாமே :


தலைவா : திரைவிமர்சனம் 

 


இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?
 

 




Tuesday 6 August 2013

விஜய் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாமா ?





தமிழ் சினிமா உலகில் ரஜினி , கமலுக்கு பிறகு அதிக ரசிகர்களையும் , அதிக எதிர்பார்ப்பையும் , அதிக வசூலையும் கொண்ட நடிகர்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித் தான் . விஜயின் கடந்த படம் துப்பாக்கி 100 கோடியை தாண்டி வசூல் செய்தததாக சொல்கின்றனர் . இந்நிலையில் அவரின் அடுத்த படம் தலைவா பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது .

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இயைமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இவர்களுடன், சத்யராஜ், சந்தானம், ராகினி நந்த்வானி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். படத்தின் வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

படபிடிப்பு முடிந்து சென்சார் சென்ற படத்தை பார்த்த குழுவினர் , படம் அருமையாக உள்ளது என்றும் , இது அனைவரும் குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் என்றும் சொல்லி " யூ " சான்றிதழ் வழங்கி உள்ளனர் . இதனால் பட குழுவினர் மிகவும் சந்தோஷமாக உள்ளனர் .


குறிப்பு : படம் ஆகஸ்டு 9  அன்று வெளியிட படுகிறது .

இதையும் படிக்கலாமே :