Tuesday 27 May 2014

வைரமுத்துவின் கவிதைகள் அவர் குரலில் ...(FREE DOWNLOAD MP3)




          கவிதைகளை பிடிக்காதவர்களே இருக்கமுடியாது . அதுவும் வைரமுத்து கவிதை என்றால் கேட்கவே வேண்டாம் . அனைவருக்கும் பிடிக்கும் வகையில் , அனைவரும் ரசிக்கும் வகையில் எளிய நடையில் கவிதை எழுவதில் வல்லவர் நமது கவி பேரரசு வைரமுத்து அவர்கள் . அவர் பல கவிதை நூல்கள் எழுதியுள்ளார் . அவை விற்பனையில் சாதனை படைத்துள்ளது . அவரின் பாடல்கள் பல தேசிய விருதுகள் பெற்றுள்ளது .


       அவரின் கவிதையை படித்து ரசிப்பதே தனி சுகம், அதுவே அவர் குரலில் கேட்டால் எப்படி இருக்கும் ?. ஆம் உங்களுக்காக அவர் தனது குரலில் தன கவிதைகளை உங்களுக்காக படித்து இல்லையில்லை பாடி காட்டுகிறார் . அவரின் கம்பிர குரலில் அந்த அழகிய கவிதைகளை உங்கள் செவிவழி சுவைக்க வாருங்கள் . இதோ உங்களுக்காக .....






· 

               For download  : Click Here

Wednesday 14 May 2014

ON-LINE இல் பொருட்கள் வாங்க சிறந்த தளங்கள்








               இப்போது பலர் ஆன் லையனில் பொருட்கள் வாங்குவதை விருப்பமாக கொண்டுள்ளனர் . காரணம் அலைச்சல் மிச்சம் , பலவகையான பொருகளை பார்த்துவான்கலாம் . நாம் விரும்பும் நேரத்தில் ஆடர் செய்யலாம் . பணத்தை செலுத்த பலவழிகள் உள்ளது என பல நன்மைகள் உள்ளது . எனவே ஆன் லையில் பொருட்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது . அப்படி வாங்க பலதளங்கள் உள்ளது அவற்றில் சிலவற்றை பார்ப்போம் .


AMAZON.IN


                  இப்போது மிகவும் பிரபலமாகிவரும் தளம் இது . இதில் இல்லாத பொருட்களே இல்லை என்னும் அளவுக்கு அனைத்துவகை பொருட்களும் கிடைகிறது .

நன்மைகள் :
  
  •    CASH ON DELIVERY (COD) வசதி இதில் உண்டு . நீங்கள் விரும்பிய பொருளை பெற்ற பின் பணத்தை கொடுத்தால் போதும் . இதனால் பணத்தை கட்டி ஏமாறும் கஷ்டம் இல்லை .
  • எப்பொழுது வேண்டுமானாலும் ஆடரை கேன்சல் செய்யலாம் . உங்களுக்கு பார்சல் கையில் வந்த பின்பு வேண்டாம் என கூட திருப்பி அனுப்பலாம் .
  • பார்சல் இப்போது எந்த இடத்தில் உள்ளது என அறிந்துகொள்ளும் வசதி .
  • SMS, E-MAIL மூலம் உங்கள் பொருள் இப்போது எங்கு உள்ளது என தகவல் வரும் .
  • 24 மணி நேர கஷ்டமர் கேர் உதவி .

இந்த தளம் செல்ல :   AMAZON.IN




மேலும் படிக்க : 

ON-LINE இல் பொருட்கள் வாங்க சிறந்த தளங்கள்

Tuesday 6 May 2014

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனத்திற்கு ...







வரும் வெள்ளிகிழமை (9-5-14) அன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வெளிவருகிறது . முடிவுகள் அனைவருக்கும் நல்லதாக அமைய வாழ்த்துக்கள் . அப்படி அமையாவிட்டால் என்ன செய்யவேண்டும் என சில வார்த்தைகள் .

பெற்றோர்களுக்கு :


  • மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை , அதையும் தாண்டி வாழ்கை உள்ளதுன்னு குழந்தைகளுக்கு புரியவையுங்கள் .

  • இந்த மார்க் வச்சு மாடுதான் மேய்க்கலாம்னு கிண்டல் செய்யாதிர்கள் , குறைந்த மார்க் எடுத்த பலர் இன்று முதலாளிகளாகவும் , அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் அவர்களுடன் வேலையாளாகவும் இருக்கிறார்கள் .

  • தோல்வியடைந்த குழந்தைகளை திட்டாதிர்கள் , பின்பு அவர்கள் தவறான முடிவு எடுத்தபின் வருந்திபயனில்லை .

  • அடுத்து என்ன படிக்க வைக்க வேண்டும் என்பதை அவர்களுடன் பேசுங்கள் . உங்களுக்கு விருப்பமானதை அவர்கள் மீது திணிக்காதீர்கள் .

  • எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நான் காலேஜ் சீட் வாங்கிதரேன்னு சொல்லாதிங்க .

  • அவன் விரும்பும் படிப்பை தெரிவுசெய்ய அனுமதியுங்கள் ஆனால் ஈன அந்த படிப்பை தெரிவு செய்தார் என தெளிவாக கேளுங்கள் . சும்மா நண்பர்களுக்காக தெரிவு செய்தால் ஏற்றுகொள்ளாதிர்கள் .

மாணவர்களுக்கு :


  • மதிப்பெண் குறைந்தால் நாம் படிக்காமல் செய்த தவறுக்கு தண்டனை என நேனைத்துகொள்ளுங்கள் .

  • எக்காரணம் கொண்டும் தவறான முடிவு எடுக்காதீர்கள் . மார்ச் போனால் மே எழுதலாம் ஆனால் உயிர் போனால் ...?

  • அடுத்து என்ன படிக்கலாம் என பெற்றோருடன் கலந்தாலோசியுங்கள் . உங்கள் விருப்பத்தை சொல்லுங்கள் .

  • நண்பர்கள் சேருகிறார்கள் என எந்த படிப்பிலும் சேராதீர்கள் , அந்த படிப்பு வாய்புகள் நெறைந்ததா என பார்த்து சேருங்கள் .

  • இதுவரை படித்தது வேறுமாதிரி இனி படிப்பு வேற மாதிரி என்பதை உணர்ந்து படியுங்கள் .

  • நல்ல காலேஜ் , நல்ல படிப்பை தெரிவி செய்யுங்கள் .

  • உங்கள் சீனியர் மாணவர்கள் , ஆசிரியர் கருத்துகளை கேட்டு படிப்பை தெரிவு செய்யுங்கள் .

தேர்வு முடிவுகளை பார்க்க :

·       www.dge1.tn.nic.in

·       www.dge2.tn.nic.in

·       www.dge3.tn.nic.in

·       www.tnresults.nic.in

ANDROID மொபைல்லில் பார்க்க :


SMS மூலம் அறிந்துகொள்ள :

TNBOARD REG.NO , DOB IN DD/MM/YYYY
TO 09282232585

இந்த வசதி 9 தேதி காலை 10 மணிக்குதான் கிடைக்கும் .