Saturday 23 March 2013

தெரியுமா ?



மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...


====================================================================

உலகின் பழைய மொழிகள் ஏழு. அதில் இப்போதும் வழக்கில் இருக்கும் மொழிகளில் ஒன்று தமிழ்.
இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான்.


=====================================================================
கோழியின் உடலில் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட சிறகுகள் உள்ளன.

=====================================================================

சிங்கம் ஒரே பாய்ச்சலில் 24 அடி தூரம் பாயும்.

====================================================================

ஆப்பிரிக்காவில் உள்ள யானைகளில் சில கறுப்பு நிறத் தந்தம் உடையனவாக இருக்கின்றன.

===================================================================

பெண் நீர் யானைகளை விட, ஆண் நீர் யானைகள் அதிக எடை உடையவை.    

நெல்லிக்காய்



நமக்கு எளிதாக கிடைக்கும் விலை மலிவான நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது.


நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.

ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.

* நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.

* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.

* நெல்லிக்காய் சாறில் சிறிது தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.

* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

* நல்ல புதிய நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும்.

* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்ததாக இருக்கும்.

* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.


நன்றி :FACEBOOK நண்பனுக்கு 

FACEBOOK இல் ரசித்தவை



பொது பிரச்சனைகளுக்கு நடிகர்கள்,திரை துறையினர் வந்து போராட வேண்டும் என்பது நமது ஆவலாக மட்டுமே இருக்க முடியும், அவர்களுக்கான தேவை வேறு என்பது போஸ்டர் ஒட்டும்,பாலபிசேகம் செய்யும்,முதல் ஷோவில் டிக்கெட் எடுத்து அவர்களது படத்தை வெற்றி படமாக ஆக்கும்,அவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் ரோட்டிலும், முகநூளிலும்,ட்விட்டரிலும் போராடும் அப்பாவி ரசிகனுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்.
 
==========================================================================================
குற்ற பிண்ணனி உள்ளவர்கள் தேர்தலில் நிற்க தடை.

#தேர்தல் ஆணையம்.

அய்யோ அப்ப இனி தேர்தலில் ரோபர்ட் மட்டும்தான் நிற்க முடியுமா?
 
==========================================================================================

ஒரு இதயத்திற்கு வலியை கொடுத்து விட்டு
இன்னொரு இதயத்திற்கு அன்பு செலுத்துவதில் பயனில்லை...!

இப்போ இருக்க சில பொண்ணுகளுக்கு இது தான் டைம் பாஸ்
 
==========================================================================================

பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.
 
==========================================================================================

பசங்க கேட்ட கேள்விக்கு பதில் தெரியலேன்னா வாத்தியாருங்க என்ன சொல்வாங்க தெரியுமா...??

1.இந்த கேள்வியே தப்பு..

2.நான் நாளைக்கு சொல்றேன்..

3.முட்டாள் தனமான கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது..

4.இத பத்தி நாளைக்கு படிச்சிட்டு வந்து நீ சொல்லணும்..

5.நல்ல கேள்வி.. யாருக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியும்.. கை தூக்குங்க பார்ப்போம்...

6.எதுத்தா பேசுற வெளிய போடா அயோக்கிய ராஸ்கேல்ல்ல்ல் ..

 
==========================================================================================

காங்கிரஸ் நண்பர்களுடன் இருக்கும் நல்லுறவை யாராலும் பிரிக்க முடியாது - அழகிரி

# அஞ்சா நெச்சன் என்ன ரைய்ட் வந்துடுமோனு பயமா