Saturday 23 March 2013

FACEBOOK இல் ரசித்தவை



பொது பிரச்சனைகளுக்கு நடிகர்கள்,திரை துறையினர் வந்து போராட வேண்டும் என்பது நமது ஆவலாக மட்டுமே இருக்க முடியும், அவர்களுக்கான தேவை வேறு என்பது போஸ்டர் ஒட்டும்,பாலபிசேகம் செய்யும்,முதல் ஷோவில் டிக்கெட் எடுத்து அவர்களது படத்தை வெற்றி படமாக ஆக்கும்,அவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் ரோட்டிலும், முகநூளிலும்,ட்விட்டரிலும் போராடும் அப்பாவி ரசிகனுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்.
 
==========================================================================================
குற்ற பிண்ணனி உள்ளவர்கள் தேர்தலில் நிற்க தடை.

#தேர்தல் ஆணையம்.

அய்யோ அப்ப இனி தேர்தலில் ரோபர்ட் மட்டும்தான் நிற்க முடியுமா?
 
==========================================================================================

ஒரு இதயத்திற்கு வலியை கொடுத்து விட்டு
இன்னொரு இதயத்திற்கு அன்பு செலுத்துவதில் பயனில்லை...!

இப்போ இருக்க சில பொண்ணுகளுக்கு இது தான் டைம் பாஸ்
 
==========================================================================================

பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.
 
==========================================================================================

பசங்க கேட்ட கேள்விக்கு பதில் தெரியலேன்னா வாத்தியாருங்க என்ன சொல்வாங்க தெரியுமா...??

1.இந்த கேள்வியே தப்பு..

2.நான் நாளைக்கு சொல்றேன்..

3.முட்டாள் தனமான கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது..

4.இத பத்தி நாளைக்கு படிச்சிட்டு வந்து நீ சொல்லணும்..

5.நல்ல கேள்வி.. யாருக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியும்.. கை தூக்குங்க பார்ப்போம்...

6.எதுத்தா பேசுற வெளிய போடா அயோக்கிய ராஸ்கேல்ல்ல்ல் ..

 
==========================================================================================

காங்கிரஸ் நண்பர்களுடன் இருக்கும் நல்லுறவை யாராலும் பிரிக்க முடியாது - அழகிரி

# அஞ்சா நெச்சன் என்ன ரைய்ட் வந்துடுமோனு பயமா


No comments:

Post a Comment