சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிப்பில், “யாவரும் நலம்” படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் , A.R.ரஹ்மான் இசையில் சூர்யா , சூர்யா , சூர்யா ,(மொத்தம் மூணு சூர்யா அதான் ) சமந்தா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்தான் 24.
கதை :
1990
இல் நடக்கும் கதையில் சேதுராமன் என்ற சூர்யா கால இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார்.
இதை அவரிடம் இருந்து ஆட்டையைபோட நிக்கும் அவரது அண்ணன் ஆத்ரேயா (இரண்டாவது சூர்யா )
சேது மற்றும் அவரது மனைவியை போட்டுத்தள்ளுகிறார். இந்த பிரச்சனைக்கு நடுவில்
சேதுவின் குழந்தை சரண்யா பொன்வண்ணனிடம் சேர அது வளர்ந்து மணி (மூன்றாவது சூர்யா )
என்ற பெயரில் வாட்சு மெக்கானிக்காக வளர்கிறார்.
சந்தர்பவசத்தால்
டயம் மெஷின் வாட்சு சூர்யாக்கு கிடைக்க அதைவைத்து சமந்தாவை காதலிக்க வைக்கிறார்.
26 வருடங்களுக்கு பின் பக்கவாதம் வந்த ஆத்ரேயா தான் குனமாகவேண்டும் என்றால் 26
வருடம் பின்னோக்கி செல்லவேண்டும் என நினைக்கிறார். சூர்யாவிடம் உள்ள கால இயதிரத்தை
எப்படி கைப்பற்றினார்? கடந்தகாலம் சென்றாரா? இன்றைய சூர்யாவின் கதி என்ன / சமந்தா சூர்யா
காதல் என்னவானது என்பதே மீதி கதை .
+ பாயிண்ட்ஸ் :
- - சூர்யா , சூர்யா , சூர்யா , படம் முழுவதும் சூர்யா மட்டுமே. மூன்று வேடத்துக்கும் அவர் காட்டும் வித்தியாசம் கலக்கல்.
- - வில்லன் சூர்யாவின் மிரட்டல் நடிப்பு. இறுதி காட்சியில் நக்கலாக பேசுவது.
- - வழக்கமான அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், இயல்பான நடிப்பில் கவர்கிறார். அதுவும் சூர்யாவிடம் தனது கடந்த காலத்தை சொல்லும் இடம் சூப்பர்.
- - காலம் என் காதலி – பாடல் இசை, செட்டிங் எல்லாம் அருமை.
- - ஒளிபதிவு கலக்கல் . டயம் பிரிஸ் காட்சிகளில் ஒளிபதிவாளரின் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள் .
- - பின்னணி இசையில் இசைப்புயல் பின்னி பெடலேடுத்துளார்.
- - கிரிகெட் கிரவுண்டில் சூர்யா செய்யும் சேட்டை.
- -
-பாயிண்ட்ஸ் :
-பாயிண்ட்ஸ் :
- - படத்தின் நீளம். 2.40 மணிநேரம் ஓடுவது ரொம்ப அதிகம். எடிட்டர் கொஞ்சம் கத்திரியை பயன்படுத்தி இருக்கலாம்.
- - சமந்தா –சூர்யா காதல் போர்ஷன் ரொம்ம்ம்ப நீளம். நமக்கு தாடி முளைபதுபோல தோன்ற ஆரமித்து விடுகிறது.
- - தமிழ் சினிமாவின் பார்முலாபடி மூளை இல்லாத படித்த பெண்ணாக சமந்தா .
- - ஒரு பாடலை தவிர மற்றது எல்லாம் வேஸ்ட். அதுவும் கிளைமேக்ஸ் முன்பு வரும் பாடல் செம கொடுமை.
- - சூர்யா அடிகடி (மூச்சுக்கு முப்பது தடவை ) I AM WATCH machanic என சொல்வது செம போர் .
- - சுத்தலான திரைகதை. திரைகதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
- - சமந்தா குடும்ப கதை தேவையில்லாத ஒன்று. எவ்வளவு நடிகர்கள் பட்டாளம் அதில். ஆளுக்கு ஒரு டயலாக் என பிரிச்சு கொடுத்துடாங்க.(ஒரே ஒரு டயலாக்தான் )
No comments:
Post a Comment